Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மேல்வில்வராயநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக என்ஜினீயரிங் பட்டதாரி நிலவழகி பொய்யாமொழி வெற்றி பெற்று பணியில் இருந்து வந்தார். தற்போது சென்னையில் அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது. இதனால் தனது ஊராட்சி மன்ற தலைவர் பதவியை நிலவழகி பொய்யாமொழி ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை கலசப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலர் கோவிந்தராஜுலுவிடம் வழங்கினார்.
எனது பணியை கிராம மக்களுக்கு செவ்வனே செய்து வந்தேன். இருப்பினும் நான் என்ஜீனியரிங் படித்து உள்ளதால் எனக்கு சென்னையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணி கிடைத்துள்ளது. எனவே எனது பஞ்சாயத்து தலைவர் பதவியை நான் ராஜினாமா செய்கிறேன். நான் மக்கள் சேவை பணியை செய்ததில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தற்போது சூழ்நிலை காரணமாக எனது பதவியை ராஜினாமா செய்வது மிகவும் வருத்தமாக உள்ளதாக என்றார். அப்போது ஒன்றிய குழு தலைவர் அன்பரசி ராஜசேகரன் உடனிருந்தனர்.